
ரஜினி,ஷங்கர்,சன் பிக்சர்ஸ் கூட்டணியில் வேகமாக வளர்ந்து வருகிறது எந்திரன். எந்திரன் படத்தின் 90 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டது. ‘எந்திரன்’ டீம்ல ஏற்கனவே ஆஸ்கர் வின்னர் ஏ.ஆர்.ரஹ்மான் இருக்க, இப்ப இன்னொரு ஆஸ்கர் நாயகன் ரசூல் பூக்குட்டியும் உள்ளே வந்திருக்கார். ‘எந்திரனு’க்கான விசேஷ ஒலிகளை டி.டி.எஸ்ல மிக்ஸ் பண்ணிக்கிட்டிருக்கார் பூக்குட்டி.
இதனையடுத்து தன்னுடைய இணையதளத்தில் இயக்குநர் ஷங்கர் எந்திரன் பற்றி எந்த தகலும் வெளியிடவில்லை. எந்திரன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் காரணமாக நீண்ட நாட்களாக தளத்தில் எதுவும் எழுதவில்லை என்றுக் கூறிய ஷங்கர் எந்திரன் குறித்து ஒரு சின்ன தகவல் அல்லது புகைப்படத்தை இங்கு வெளியிட்டால் கூட அது ஏகப்பட்ட ஆர்வத்தைத் தூண்டி, ரசிகர்களின் எதிர்ப்பார்ப்புகளை எகிற வைக்கிறது எனக் கூறியுள்ளார். மேலும், ஒரு பாடல் காட்சி படமாக வேண்டியுள்ளது. மற்றபடி இறுதிக்கட்ட எடிட்டிங் உள்ளபட முழுப் படமும் முடிந்து, பின்னணி இசைச் சேர்ப்பு மற்றும் சவுண்ட எஃபெக்ட்ஸுக்காக ஏ ஆர் ரஹ்மான் மற்றும் ரஸூல் பூக்குட்டியிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. கடைசி பாட்டு மட்டும் படமாக்கப்பட வேண்டும். க்ளைமாக்ஸ் மற்றும் சில முக்கிய காட்சிகளில் கிராபிக்ஸ் சேர்ப்பு பணிகள் பாக்கியுள்ளது. மீண்டும் சந்திக்கிறேன்..." என்று கூறியுள்ளார் ஷங்கர்.
No comments:
Post a Comment